சீரியல் நடிகையின் இயக்குனர் ஆசை!

சின்னத்திரை நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ஐஸ்வர்யாவுக்கு சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். வந்தாளே மகராசி தொடரின் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யா, தற்போது திரைவிழாக்களைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி ஆகியிருகிறார். அத்துடன் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 7சி தொடரில் நடித்தும் வருகிறார்.