குத்து பாடலுக்கு குத்த வரும் ஐஸ்வர்யா

பாலிவுட், கோலிவுட் என, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பல ஹிட் படங்களை கொடுத்த ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சனை திருமணம் செய்தபின்னும், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால், குழந்தை பிறந்த பின், நடிப்புக்கு தடா போட்டு விட்டார். இடையில், ஒரு சில இயக்குனர்கள் வற்புறுத்தியும்,நடிக்க மறுத்து விட்டார். இப்போது, குழந்தை, ஓரளவுக்கு வளர்ந்து விட்டதால், அவரின் கவனம், மீண்டும் திரையுலகத்தின் பக்கம் திரும்பியுள்ளது.