பூனையை கண்டால் பீதியடையும் வித்யா

கவர்ச்சி காட்டவே பயப்படாதவர் வித்யா பாலன். அதேபோல எப்பவும் தைரியமாகவும், தில்லாகவும் இருப்பவர். ஆனால் அப்படியாப்பட்ட அவருக்கு ஒரே ஒரு 'மேட்டர்' மட்டும் பிடிக்கவே பிடிக்காதாம்.. அந்தப் பெயரைக் கேட்டாலே பயந்து போய் விடுவாராம்.. அவர்தான் பூனையார். பூனைகள் என்றால் வித்யாவுக்கு செம அலர்ஜியாம். பூனை என்ற பெயரைக் கேட்டாலே அவருக்கு டென்ஷனாகி விடுமாம். அதேபோல எங்காவது பூனையைப் பார்த்து விட்டால் போதும், ஓடி ஒளிந்து விடுவாராம்.