கோயம்பேடு பேருந்து நிலையம் சினிமா விமர்சனம்

தாதாவிடம் அடியாளாக வேலை பார்ப்பவர் அசோக். நண்பனை அவமானபடுத்திய அன்விதாவை காதலித்து பழிவாங்க முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் நிஜமாகவே காதலிக்க துவங்குகிறார். அன்விதாவும் விரும்புகிறார். அசோக் காதல் போலியானது என்று அப்பெண்ணிடம் நண்பன் பற்ற வைக்கிறான். அன்விதா வெறுப்பாகி அசோக்கை உதறிவிட்டு இன்னொருவனை மணக்கிறார். காதலியை தீர்த்துகட்ட கோயம்பேடு பஸ் நிலையம் வருகிறார் அசோக்.