தேரடி வீதி திருக்கண்ணபுரம் நாயகியாக ராதிகா ஆப்தே!

ஒளிப்பதிவாளர் கோபிநாத் தயாரித்து, ஒளிப்பதிவு செய்யும் படம் தேரடி வீதி திருக்கண்ணபுரம். எழுத்தாளர் பாபு.கே.விசுவநாத் இயக்குகிறார். இதில் நாயகியாக நடிப்பதற்கு ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோவாக எங்கேயும் எப்போதும் சர்வானந்த் நடிக்கிறார். கும்பகோணம் பகுதியில் நடக்கும் கதை. ஒளிப்பதிவாளர் கோபிநாத்தும், இயக்குனர் பாபு கே.விசுவநாத்தும் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகிறதாம்.
டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கி ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

கரன் நடிக்க நீங்கள் இயக்கிய கந்தா படம் என்னாச்சு பாபு சார்...

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget