ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 8

மனநலம்

*  உளவியலறிஞர்கள் பார்வையில் மனநலம் என்பது மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு மற்றும் நன நிறைவு எனப்படுகிறது.

*  மனநலம் என்பது வாழ்க்கை நிலையைக் குறிக்கும் ஒருவரின் ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டைக் குறிக்கும்.

*  நடத்தைப் பிறழ்ச்சிகள்(Behaviour disorder) இன்றி பிறரோடு இணைந்துபோகும் தன்னிணக்கமே மனநலம் எனப்படுகிறது.

*  மனவெழுச்சி வளர்ச்சியின் இறுதி எல்லை மனவெழுச்சி முதிர்ச்சி ஆகும்.

*  மனவெழுச்சி முதிர்ச்சி, சமநிலையுடன் சூழ்நிலையில் பொருத்தப்பாட்டுடன் பிறரோடு மனநிறைவுடன் இணைந்து தானும் பிறரும் மகிழ்ச்சியையும் விதத்தில் ஒருவர் செயல்படும் நிலையே மனநலம் எனப்படுகிறது.

*  அன்பும் பரிவும் கொண்ட ஆசிரியர், மகிழ்ச்சியான கற்ரல் சூழல் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நண்பர்கள், கருத்து சுதந்திரம், ஒய்வு, நல்ல உணவு, உணர்வு ரீதியாக மனநிறைவு அடைதல் போன்றவை மாணவர்களிடம் உணர்வு சமநிலையைத் தோற்றுவிக்கும் காரணிகளாகும்.

*  உற்சாகமான மனநிலை, நல்ல உறக்கம், உணவில் திருப்தி ஆகிய மூன்றும் மனநலத்தின் வெளிப்படையான அறிகுறிகளாகும்.

*  புதிய சூழலுடன் ஒத்துப்போகும் உறவே இணக்கம் எனப்படும்.

*  புதிய சூழலில் காணப்படும் எதிர்ப்பார்புகளை ஏற்றுக்கொள்ளுதல், அவற்றை நிறைவேற்றுதல், தொடர்ந்து கடைபிடித்தல் போன்றவை இணக்கமான நடத்தைக்கு அடிப்படைகளாகும்.


பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget